Sunday, May 3, 2009

கவிதையில்லா கதை !! ( My first lyrics )

நிலை: 5 நாள் நாட்டு நலப்பணித்திட்ட முகாம், கோவை.
எழுதப்பட்ட வருடம்: 1999 ( கல்லூரி தொடக்கம், இருபதின் இறுக்கம் :) )
குறிப்பு: முதல் கவிதை ( கவிதை மாதிரி.. ஹா ஹா ).

நானே நான்!!

எனதிதயத்தில் முதல் அம்பு..
   விட்டவள் யாரோ நானறிவேன்..
அன்று விட்ட அம்பின் வலி
   இன்றும் என் நெஞ்சில்.....

கண்களின் பார்வையில்
   ஆயிரம் வார்த்தைகள்..
கருவளைய காந்தம் ஒரு
   கவர்ந்திலுக்கும் கலை...

பல பேரிடமும் பேசியுள்ள நான்
   உன்னிடம் மட்டும் உணர்ந்தது.. உலகை.
பாட்டை பாராட்டிய போது
   இதயம் கதறியது 'இவள்தான் உன்னவள்"

யார் அவள் ?....

எதற்காக இப்படி படுத்துகிறாள்..
எதற்காக என்னை சந்தித்தாள்..
எதற்காக என்னிடம் பேசினாள்..
ஏதற்காக என்னை இப்படி உளர வைத்தாள்...

இரண்டு நாள், எல்லோரிடமும் போலட்தான்
அவளிடமும் பழகினேன்..... அந்த
மூன்றாவது நாள், எங்கள் கண்களின் சந்திப்பு,
என் இதயத்தின் நிந்திப்பு...

என் மனம் எந்நேரமும் 
  அவளின் முகத்தையே
வருடிக்கொண்டிருப்பது
  அவளுக்கெப்படி தெரியும்..

ஒருவேளை...
இத்தனையும் பொய்யோ...
அத்தனையும் என் மன தூறல்தானோ ?..
என் மனக்கோட்டை,
இடியுமா... சிறப்புறுமா?

ஏமா ஹேமா !!!..
இதற்கு ஒரு முடிவுதான் என்னம்மா !!
நீ சொல்லம்மா !!!..

இவண்,
கார்த்தி........

No comments:

Post a Comment