Monday, June 15, 2009

காலம் பதில் சொல்லும் !

நிலை: கல்லூரிக்காலம் ( முதுகலை )
எழுதப்பட்ட வருடம்: 2001
குறிப்பு: என்னுயிர் நண்பர்களின் உயரிய உறவில் உருவானது.
காலத்தின் பதில் ??? : வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும் :) ( ஹா ஹா )

பார்க்க அழகானவள்,
பழக எளியவள்
நயமாய் பேசுவாள்
நாகரீகமாய் பழகுவாள்
தவறாய் பேசியதும் இல்லை
தலைவியாய் நினைத்ததும் இல்லை

ஆனாலும் ஏனோ !
நட்பாய் பழகியவளை
நாயகியாய் அவன் நினைத்தான்

அன்பான வார்த்தைகளின்
அர்த்தத்தை மாற்றினான்.

இதயத்தில் அவளை
சிறைவைத்த போதும்
காதலை கூறவுமில்லை - அவளின்
கற்பனையை கலைக்கவுமில்லை !

அன்புத்தங்கை,
அழகான அம்மா,
இவர்கள் பாசத்தில்
இளைப்பாறும் இவளுயிர்..

விடுதி சென்றது முதல்
வீடுவந்து சேரும் வரை..
அங்கு நடந்த செய்திகளை
அடுக்கடுக்காய் இறக்கிவைப்பாள்..

பருவமகன் ஒருவன்
பார்வையால் சீண்டினாலும்..
பயமின்றி கூறிடுவாள்
பாசமிகு பெற்றோரிடம்..

அவள் மறைத்து வைத்தது
எதுவுமில்லை...
அவளுக்கு மனதிற்குள் வைக்கவும்
தெரியவில்லை...

நடந்ததை..
நாடகமாய் உரைப்பவளுக்கு..
நண்பனை..
நாயகனாய் நினைப்பதை
உரைக்க மனமில்லை...

அவளுக்காகவுயிர்வாழும்
அன்பு மனங்கள்..
அதை ஏற்குமோ..
என்றவுள்ளச்சம்.

எதைக்கேட்டாலும்
எதிர்க்காது கொடுப்போர்
அன்பு மகளுக்கு,
ஆசை காதலனை
இணைத்து வைக்க
இசைய மாட்டார்களோ !
இல்லை.....
சாதி மத பேதத்தில்
சதைகளும் ஊறியதால்
சாமர்த்தியமாய் சாடுவார்களோ ?

எம்முடிவை எடுப்பார்கள்
எதுவும் புரியவில்லை
அவளுக்கு...

யோசித்தாள் பல நாட்கள்..

காதலை சொல்லி...
பெற்றவளின் மனதிற்கு
கசப்பூட்ட மனமில்லை..

நட்பெனும் காவியத்தை
காதலெனும் கைகொண்டு
கசக்கவும் விரும்பவில்லை..

இனிய பெற்றோரின்
இன்பத்திற்கு உயிர்கொடுக்கவும்....
நயமான நட்பிற்கு
நாகரீகமாய் கைகொடுக்கவும்..

எடுத்தாள் ஒரு முடிவை !
தடுத்தாள் பல நினைவை !
மறந்தாள் சில கனவை !
மாற்றினாள் அவன் மனதை !
தொடர்ந்தாள் நல் உறவை !

இதற்கு,
இனி,
'காலம் பதில் சொல்லும்'

இவண்,
கார்த்தி..

No comments:

Post a Comment