Tuesday, June 16, 2009

வீரியமுள்ள விதை !!


நிலை: ( முதுகலை ) கல்லூரி நாட்கள்...
எழுதப்பட்ட வருடம்: 2002
குறிப்பு: காதல் சொல்லப்பட்டது, சொன்னது மறுக்கப்பட்டது. மறுப்பின் வலியும், மனத்தின் நிலையும் உருவகப்படுத்தப்பட்டது.

விதை...
வீரியம் தெரியாத விதை..
விளைவை தெரிவிக்காத விதை....

விதை விளைத்தேன் - அது
முளைவிட்டபோது..
உன்னிடம் காண்பித்தேன்..
வெட்டச்சொன்னாய் செடி வளர்ந்த பிறகு..
கண்ணீரை கனநேரத்தில் மறைத்தவனாய்..
வெட்டியே விட்டேன்...

மண்ணுள்ளே !!
வேர் மட்டும் உறுத்துவதறிந்த நீ
வேரோடு பிடுங்க முடியுமாவென்றாய்..

உனக்காக முடியுமென்று..
உண்மைக்கு புறம்பான நான்..
கண்ணீரை ஊற்றி...
செந்நீரால் நனைத்து..
பன்னீரில் கழுவி பிடிங்கினேன்...

....வலித்தது....

ஆனாலும் முயன்றேன்...
ஆஆஆ - பிடிங்கியே விட்டேன்...

.
.
.
காலங்கள் கழிந்தன...
நாட்கள் நகர்ந்தன...
.
.
.
பல நாட்களாக,
உள்ளுக்குள்
ஏதோ....
உறுத்தியதறிந்தும்
ஏதோ...
பலமிலந்த மண்ணின்
பலமான வேலையென்றிருந்து விட்டேன்..
ஏனெனில் -
பிடுங்கும்போது - வேர்
பிய்த்துக்கொண்டு வந்ததெனக்கு
விளங்கவில்லை..

வெளியே செடியை வெட்டியதாலும்....
உள்ளே வேரை பிடிங்கியதாலும்....

பலமிலந்த மண்..
பல நாட்களாய்...
பலவிதமான - நட்பு நீரை
பருகி நிலைத்தபோழ்து - அந்த
பாழாய்ப்போன பிய்ந்தவேர்...
முளை விடத்தொடங்கியது....

ஆயினும் இந்தமுறை...
அந்த மண் -
அந்த செடியை...
வளருவும் விடாமல்,
வேரைக்காயவும் விடாமல்...
வேரை உள்ளே பதுக்கி - செடியின்
வாசத்திலேயே வாழ விழைந்தது..

ஏனெனில்,
உனக்கு சுலபமாகவிருக்கலாம்.
'செடியை வெட்டிவிடு'...
'வேரை பிடிங்கிவிடு'.. - என்று கூற.

ஆனால் - இந்த
மண்ணுக்கு மட்டுமே தெரியும்,
வலிகள் என்னென்ன..
விளைவுகள் என்னென்ன...

இனி,
இங்கு,
களைகள் வளரவும் வழியில்லை..
காளைகள் மேயவும் இடமில்லை..

இவண்,
கார்த்தி.

அந்த வீரியமான விதையை விதைத்ததற்காக,
இந்த மண்ணுக்கு இந்தப்படைப்பு,
ஓர் அர்ப்பணிப்பு !



2 comments:

  1. Nice one..

    but anda vediya valara vitutu dhan nee kaanbikiraai... vediya mannil vaikum pozhudu yen sollavillai??

    ReplyDelete
  2. too gud to read machi... innum neriya ezhudhu... but indha matter-a un manasula irundhu full-a azhichutta i'll be very happy.

    ReplyDelete