Sunday, May 10, 2009

ஒரு கனவின் நினைவு

நிலை: முதன்முதலாக விடுதிக்காற்றை சுவாசித்தபோது.......
வருடம்: 2001 (இளங்கலைக்கு பிறகு, முதுகலைக்கு முன்பு)
குறிப்பு: விடுதி சேர்ந்த மகிழ்வும், வீட்டின் பிரிவும் ஒருசேர...... ஒரு கதம்பமான உணர்வின் விளிம்பில்.......

ஒருமுறையேனும்...
அனுபவித்துவிட வேண்டும்,
'விடுதி வாழ்க்கை' - என்றுதான்
விளையாட்டாய் நினைத்தேன்.

கனவுகள் நனவாக
கைவந்து சேர்ந்ததாய்
காற்றாய் வந்தது
கடிதம்.... பாரதியார் பல்கலையிலிருந்து.

எழுந்து ஆடினேன்,
எம்பி எம்பி குதித்தேன்.

இரண்டு ஒன்று போனது.

அன்று,
புறப்பட்டேன் நான் போருக்கு..
படிப்'போருக்கு' - இடம்தரும்
பாரதியார் பல்கலைக்கு...
ஆயுதங்களாக பெட்டிபடுக்கையுடன்
ஆயத்தமானேன் - போருக்கு.

பெற்றோரின்
பாசவுறைகளுடன்...
அண்ணா அண்ணியின்
அறிவுரைகளுடன்...
உற்றார் உறவினரின்
ஊக்குவிப்புடன்...
பழகிய பலரின்
பாராட்டுதலுடன்...
தெரிந்தோரின்
தைரிய வார்த்தைகளுடன்.

எனக்குத்துணையாக வந்தன,
பல ஆயுதங்கள்...,
பல துணிக்கவங்கங்கள்...,
பல நினைவுகள்...,
பல கனவுகள்...

வீட்டு வாசலை விட்டு வெளியேறி
வேகமாய் பயணித்து
விடுதியில் நுழைந்தேன்,
வீரனாக.....

இரவில் இருப்பில்லை...
பகலில் படிப்பில்லை..

அதிகாலையில் அம்மாவின்
அதட்டலில்....
அசால்டாய் எழுந்து..
அவசரமாய் புறப்பட்டு...
அடித்து பிடித்து பயணித்து...
ஆனந்தமாய் கல்லூரியில் நுழையும்
அந்த நாளின் ஞாபகம்
அழகாய் என் நெஞ்சில்...

கடமைக்காக சாப்பிட..
நட்புடன் நடந்தேன்
நடுவுணவறைக்கு...

பெரிதான தட்டில்..
அன்னமிட்டு அமர்ந்தேன்
அதன் நடுவில்...............

"அய்வரும் அழகாய் அமர்ந்து
அன்னத்தை அளந்த..
அந்த நாள் ஞாபகம்..

தேவையில்லாமல் தமக்கையை
தவிக்கவிட்டு..
தாளம் தட்டும் தினங்கள்"

கனவு கலைந்தேன்.

அனைவரும் அகன்றிருந்தனர்..
நான் மட்டும், அன்னத்தை அகற்றி
நடுதட்டை நோக்கியிருந்தேன்...

கண்ணீரில் கைகழுவி
கல்லூரி சென்ற என்னைப்...
'பகடிவதை' - என்ற பெயரில்
பாடாய் படுத்தினார்கள்..

அன்னையின் அரவணைப்பில்...
ஆசையாய் அயர்ந்திருந்த
பாசமான அந்த நாட்களை
படுத்தால் மட்டுமே - எண்ணிப்
பார்க்கக்கூடிய மனநிலையில்
படுத்துறங்ககூட முடியாமல்
பாரத்தை அநுபவித்துக்கொண்டே....
படுக்கிறேன்...........

- இவண்
கார்த்தி

Sunday, May 3, 2009

தத்து(பித்து)வங்கள் ( ஹைக்கூ )

தத்து(பித்து)வங்கள் ( ஹைக்கூ )

நிலை: அவ்வப்போது தோன்றியவை...
வருடம்: 2001-2003

1. பாரம் சுமக்கும் போதுதான் அறிந்தேன்
  பாதையில் இத்தனை மேடு பள்ளங்கள்..

2. இரு இதயம் இணைகிறது இன்பமாய்......
    இறுதியில் - 
    இணைந்த இதயங்கள்
    இருட்டுக்குள்.

3. ஆடு:
  படைத்தவனுக்கே படைக்கப்பிறந்த
  பாவ ஜீவன்.............

இன்னும் பல......

இவண்,
கார்த்தி  
    

காதலின் பிடியில்....

நிலை: தனிமை
வருடம்: 2001 (இளங்கலைக்கு பிறகு, முதுகலைக்கு முன்பு)
குறிப்பு: காதலின் ஏக்கத்தில் எழுதப்பட்டது....

காதலின் பிடியில்....

சிறு பருவத்தில்
   சிரிப்பைக்காட்டும்...
விடலைப்பருவத்தில்
   விட்டு விட்டு தொடரும்...
கல்லூரிப்பருவத்தில்
   கவர்ந்திழுக்கும்.....
படித்து முடித்தபின்
   பாடாய்படுத்தும்....

இந்த பாழாய்போன காதல்.......

கவிதையில்லா கதை !! ( My first lyrics )

நிலை: 5 நாள் நாட்டு நலப்பணித்திட்ட முகாம், கோவை.
எழுதப்பட்ட வருடம்: 1999 ( கல்லூரி தொடக்கம், இருபதின் இறுக்கம் :) )
குறிப்பு: முதல் கவிதை ( கவிதை மாதிரி.. ஹா ஹா ).

நானே நான்!!

எனதிதயத்தில் முதல் அம்பு..
   விட்டவள் யாரோ நானறிவேன்..
அன்று விட்ட அம்பின் வலி
   இன்றும் என் நெஞ்சில்.....

கண்களின் பார்வையில்
   ஆயிரம் வார்த்தைகள்..
கருவளைய காந்தம் ஒரு
   கவர்ந்திலுக்கும் கலை...

பல பேரிடமும் பேசியுள்ள நான்
   உன்னிடம் மட்டும் உணர்ந்தது.. உலகை.
பாட்டை பாராட்டிய போது
   இதயம் கதறியது 'இவள்தான் உன்னவள்"

யார் அவள் ?....

எதற்காக இப்படி படுத்துகிறாள்..
எதற்காக என்னை சந்தித்தாள்..
எதற்காக என்னிடம் பேசினாள்..
ஏதற்காக என்னை இப்படி உளர வைத்தாள்...

இரண்டு நாள், எல்லோரிடமும் போலட்தான்
அவளிடமும் பழகினேன்..... அந்த
மூன்றாவது நாள், எங்கள் கண்களின் சந்திப்பு,
என் இதயத்தின் நிந்திப்பு...

என் மனம் எந்நேரமும் 
  அவளின் முகத்தையே
வருடிக்கொண்டிருப்பது
  அவளுக்கெப்படி தெரியும்..

ஒருவேளை...
இத்தனையும் பொய்யோ...
அத்தனையும் என் மன தூறல்தானோ ?..
என் மனக்கோட்டை,
இடியுமா... சிறப்புறுமா?

ஏமா ஹேமா !!!..
இதற்கு ஒரு முடிவுதான் என்னம்மா !!
நீ சொல்லம்மா !!!..

இவண்,
கார்த்தி........

அம்மா !!

நான் இப்பூவுலகில்
   கண் விழித்த நாள் முதல்....
நான் என் கனவுலகில்
   மனம் பதித்த நாள் முதல்....
நான் எனது முதற்பள்ளியில்
   கால் பதித்த நாள் முதல்...
என் சுயநினைவுகள்
   என்னிடம் இருக்கும் நாள் வரை...
ஐம்புலங்கலிலும் ஆக்கிரமிப்பது
   அவளே !! ................. அம்மா... 

ஒரு பயிர்ச்சி !!!

தமிழன்புடன் கார்த்தி......